Thursday 2 January 2014

ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு : மின் ஊழியர் மத்திய அமைப்பு வருத்தம்

சென்னை, ஜன. 1 -
மின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த முதல்வரின் அறிவிப்பு வருத்தமும், அதிர்ச்சியும் அளிப்பதாக உள்ளது என்று மின் ஊழியர் மத்திய அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

                                  இதுதொடர்பாக மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2011 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் புத னன்று (ஜன.1) வெளியிட்டுள்ளார். அதன்முழு விவரங்களையும் பரிசீலித்த பின்னரே சாதக, பாதக அம்சங்கள் குறித்து கூற முடியும்.இருப்பினும், ஊதிய உயர்வு சம்பந்த மான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 14.11.2013 அன்று வாரிய தரப்பின் ஆலோசனை முன் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட தொழிற் சங்கங்கள் வாரியத்தின் ஆலோசனை மீது கருத்துக்களை கூறின. இதன் மீது வாரியம் மற்றும் அரசின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோதே, தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கையை இறுதிப்படுத்தி அரசு அறிவிப்பதற்கு முன்னர், முதலமைச்சரோ, மின் துறை அமைச்சரோ தொழிற் சங்கங்களுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இதை அறிவித்திருக்க வேண்டும் என மின் ஊழியர் மத்திய அமைப்பு கருதுகிறது.2005-ல் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை யின்போது இன்றைய முதலமைச்சர் தொழிற் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அறிவிப்பு வெளி யிட்ட மரபைக் கூட இம்முறை கடைப் பிடிக்கவில்லை என்பது மன வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி தீக்கதிர்

No comments:

Post a Comment