Friday 13 December 2013

பராமரிப்பு தனியாருக்கு விட திட்டம் மேட்டூர் தெர்மல் ஊழியர்கள் கலக்கம்


 மேட்டூர் தெர்மல் கன்வேயர் பராமரிப்பு மற்றும் நிலக்கரி கையாளும் பகுதியை தனியாருக்கு டெண்டர் விட முடிவு செய்துள்ளதால், அப்பகுதியில் பணிபுரியும், 40 சதவீத ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டூர் தெர்மலில் (அனல்மின் நிலையம்) ஒரு யூனிட்டில், 210 மெகாவாட் வீதம், நான்கு யூனிட்களில், 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு, 14,000 டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது.
மேட்டூர் தெர்மலுக்கு தினமும் சராசரியாக, ஏழு சரக்கு ரயில்களில் நிலக்கரி வருகிறது. நிலக்கரி இறக்கும் பகுதி, நிலக்கரியை மின் உற்பத்திக்காக அனுப்பி வைக்கும் பிரைமரி கிரசர், செகன்ட்ரி கிரசர், லோக்கோ, ஸ்டேக்கர், ரீ கிளைமர், டிப்ளர்கள் உள்ளது.
கிரசரில் இருந்து பாய்லருக்கு நிலக்கரி எடுத்து செல்லும் கன்வேயர் பெல்ட் பகுதி மற்றும் நிலக்கரி கையாளுதல் பகுதியில் ஒரு கண்காணிப்பு பொறியாளர், இரு செயற்பொறியாளர், 80 உதவி மற்றும் இளநிலை பொறியாளர், ஹெல்பர், ஆபரேட்டர் உள்பட, 600 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.தெர்மலின் மொத்த ஊழியர்களில், 40 சதவீதம் பேர் இப்பகுதியில் வேலை செய்வது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் தெர்மலில், 2012 மே, 10ம் தேதி நடந்த தீ விபத்தில், 160 மீட்டர் நீளமுள்ள நிலக்கரி கன்வேயர் பெல்ட் எரிந்து சேதமானதால், 10 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டமும், 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது.இதனால், நிலக்கரி கையாளுதல் மற்றும் கன்வேயர் பராமரிப்பு பணி அனைத்தையும் மொத்தமாக ஒரே தனியார் நிறுவனத்துக்கு, 100 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட மின்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் இம்மாத இறுதியில் நடக்க உள்ளது.இதற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து மேட்டூரில் மின்ஊழியர்கள் மத்தியில் நோட்டீஸ் வினியோகம் செய்கிறது. மேலும், கன்வேயர் பராமரிப்பு தனியாருக்கு விடுவது, தெர்மல் மின் ஊழியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த, 25 ஆண்டாக நிரந்தர ஊழியர்கள் வேலை செய்த மேட்டூர் தெர்மலின் பல்வேறு பிரிவுகளில், தற்போது ஒப்பந்த ஊழியர்கள் மூலம் இயக்கப்படுகிறது. ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பதிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.இந்நிலையில், மேட்டூர் தெர்மலில், 40 சதவீதம் ஊழியர்கள் பணிபுரியும் நிலக்கரி கையாளும் பகுதி, கன்வேயர் பெல்ட் பகுதியை தனியாருக்கு விட மின்கழகம் முடிவு செய்துள்ளது. இதனால், அப்பகுதியில் பணிபுரியும், 40 சதவீத ஊழியர்கள் வேறு தெர்மலுக்கு மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.
ஒப்பந்த தொழிலாளர் நியமனத்தால் தெர்மலில் உள்ள, 40 சதவீத பணியிடங்கள் ரத்து செய்யவும் வாய்ப்புள்ளது. இதனால், மேட்டூர் தெர்மல் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர். எனவே, தெர்மல் கன்வேயர் பராமரிப்பை தனியாருக்கு விடும் முடிவை மின்கழகம் ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thursday 26 September 2013

TAMILNADU POWER ENGINEERS ORGANISATION Newly Elected Office Bearers in 4 th State conference held at Tuticorin on September-22 nd 2013


Sl No

Name

Post

Resistance Address

 1.

 Honorary president 

 R. Sridhar, Junior Engineer/I gr./ Cuddalore EDC.
Cug no 9445855957

 Com.R. Sridhar,
14A Muthalamman Koil Street,
Appavu Street,Pudhu Palayam,
Cuddalore 607 001
Cell-9443231406.

2.      

President

T. Arivazhagan, Assistant Engineer/ ETPS
Cug no-9445859775

Com. T.Arivazhagan,
6-F, ½, Camp-3,
ETPS Quarters,Ennore, 
Chennai-600 057.
Cell-9444262014.

3.      

General Secretary

K. Arul Selvan, Assistant Engineer / Dharmapuri EDC
Cug no 9445855502

Com.K.Arulselvan,
Muniappan House,
6th Cross Street(Last)
Gandhi Nagar,
Dharmapuri-636 701.
Cell-9443388104.

4.      

Treasurer

K. Jeevanandam,Junior Engineer /Igr./ Madurai EDC
Cug no 9445852899

Com.K.Jeevanantham,
6/124-1 Bharathiyar Street,
Sivagami Nagar,Attikulam,
K puthur,Madurai-625 007.
Cell-9443156186.

5.      

Organising Secretary

S. Appadurai, Junior Engineer / I gr/ TTPS

Com.S.Appadurai,
20/3,Type-II
Camp 1, TTPS,
Tuticorin 628 006.
Cell-9443078855.

6.      

Deputy General Secretaries

M. Parimelazhagan,Junior Engineer /IGr / MTPS
Cug no 9445859616

Com.M.Parimelazhagan,
R-Type 20/6,Thermal Qts,
Near Murugan Koil,
Mettur Dam-636 401.
Cell-9629944663.

 7.

 

 R. Guruvel, Junior Engineer / I gr/ Ramnad EDC
Cug no 9445853021

 Com.R.Guruvel
3/2805/9, Kadamba nagar,
Pattnam Kaththan,
Collectrat (Post)
Ramanathapuram 623 503
Cell-9442050315.

8..      

 

A. Palani, Junior Engineer /II gr/Chennai South EDC

Com.A.Palani,
Plot II, Padmavathi Nagar,
Selaiyur,
Chennai 600073.
Cell-9841744639.

9..      

Vice President:1.

D. Kumar, Junior Engineer /I gr./ETPS

Com. D.Kumar
6F-2/3,Camp-III,
ETPS Quarters,
Ennore, Chennai-600 057.
Phone-9940188665.

10.      

2.

V.K.Thanikai Arasu

ETPS 

11.      

3.

M. Rama Subhu, Junior Engineer/Tutucorin EDC

Tuticorin 

12.  

4.

G.Sankareswaran

Changelpet

13.  

5.

P.Arumugam

Coimbatore

14.  

6.

V.Lakshminarayanan

Chennai

15.  

7.

A R Alagarsamy

Sivakangai

16.  

8.

T.Karunambigai

Coimbatore

 17

 9.

 A.Muruganantham

Chennai/South 

 18

 10.

 J.Angels

Tirupathur 

 19

 11.

 R.Kogulavarman

Madurai 

20.  

Secretaries

1.

R. Adalarasu, Junior Engineer / I GR/ ETPS

Com.R.Adalarasu,
1/40, School Street,
Surapet,
Puzhal,
Chennai 600 073.
Cell-9444687894.

21.  

2.

 P. Kumaresapandian, Assistant Engineer /MTPS
Cug -9445859644

Com P.Kumeresapandian
S Type 12/4
7.5 Acra qts,
Mettur Dam-636 401
Cell no 9629944661.

22.  

3.

M. MuniRaj, Assistant Engineer /Dharmapuri EDC

Com. M.Muniraji,
1/443 TNHB,Kullanur
Collectrate (po),
Dharmapuri-636 705.

23.  

4.

A.E.Arunachalam, Junior Engineer /I GR / T.V. Malai EDC
Cug no-9445856298

Com. A.E.Arunachalam,
No 54 Kanigapuram Street,
Chiyyaru
Tiruvanamalai Dist
Pin-604 407
Cell  9443809349

24.  

5.

 R.Somasundaram

Coimbatore

25.  

6.

 M.Mailvaganan

M.Mayilvaganan,No 141/1 Malai Street,
No 241 Aalapakkam,
Vallam Post,
Chengelpet-603002.
Cell No-9445411550.

26.  

7.

 M.Gopalakrishnan

Karur

27.  

8.

M.Iruthayaraj

Trichy 

28

9.

M.Ananthan

TTPS

 29

10. 

 M.Panimalar

Darmapuri 

30

11.

T.Subramaniyan

Madurai

Friday 16 August 2013

புதிய பென்ஷன் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆக. 23ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

புதிய பென்ஷன் எதிர்ப்பு நடவடிக் கைக் குழு கூட்டம் செவ்வாயன்று (ஆக. 13) சென்னையில் சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமை யில் நடைபெற்றது.கூட்டத்தில் மத்திய - மாநில
அரசு ஊழியர், ஆசிரியர்வங்கிஇன்சூரன்ஸ்தொலைதொடர்புஅரசு போக்குவரத்துமின்சாரம்,ரயில்வே அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு:
மத்திய அரசு ஓய்வூதியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியாக பென்ஷன் நிதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் மூலம் புதிய பென்ஷன் திட் டத்தை கொண்டு வந்துள்ளது. இம்மசோ தாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொட ரில் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிக் கும் நடவடிக்கையை இக்கூட்டம் வன் மையாகக் கண்டிக்கிறது.

Monday 5 August 2013

இலஞ்சம் வாங்கமாட்டேன் து.கோபாலகிருஷ்ணன் தினமலரில் பிரகடனம்

இலஞ்சம் வாங்கமாட்டேன் து.கோபாலகிருஷ்ணன்  மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு மின்ஊழியர் மத்தியமைப்பு  தினமலரில் பிரகடனம் 



Wednesday 17 July 2013

புதிய பென்சன் திட்டம் கைவிட கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், : புதிய பென்சன் திட்டத்தை விட்டு பழைய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு கரூர் கிளை சார்பில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த கிளை தலைவர் தனபால் பேசியதாவது: மின்வாரியத்தில் பணியாற்றும் மஸ்து£ர்களை கள உதவியாளர்களாக பதவி உயர்வு செய்ய வேண்டும். ஐடிஐ கள உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 5வருட பணி என்ற நிபந்தனையை கைவிடவேண்டும். கள உதவியாளர்கள் பயிற்சி காலத்தை ஒரே சீராக அமைக்க வேண்டும். கணக்கீட்டாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. கணக்கீட்டுப் பிரிவில் வேலைப்பளுவிற்கு அப்பாற்பட்ட வேலையை செய்ய நிர்பந்தம் செய்கின்றனர். பகுதி நேர பணியாளர்களின் காலிபணியிடங்களை நிரப்பி சம்பள உயர்வு வழங்க வேண்டும். விஸ்தரிப்பு பணிகளை செய்ய கட்டுமானப் தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும். துணை மின்நிலையங்களுக்கு இயக்குனர் பணியிடம் நிரப்பப்படாமல் இருக்கிறது. நிரந்தர தன்மையுள்ள வேலைகளை செய்யும் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கிளை செயலாளர் குமரேசன், முன்னாள் மாநில துணைத்தலைவர் கந்தசாமி, துணைசெயலாளர் ராமமூர்த்தி, ராமகிருஷ்ணன், சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிளை பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tuesday 21 May 2013

சி.ஐ.டி.யூ., மாநாடு

காரைக்குடி:தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன சி.ஐ.டி.யு., மாநில மாநாடு காரைக்குடியில் நடந்தது. தலைவர் சவுந்தரராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., திவாகரன், பொது செயலாளர் அன்பழகன் பொருளாளர் தயானந்தம், சி.ஐ.டி.யு., மாநில பொது செயலாளர் சுகுமாறன், மின் ஊழியர் மத்திய அமைப்பு பொது செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், அரியானா மாநில போக்குவரத்து செயலாளர் ராம் அசாரே உட்பட பலர் பேசினர்.மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய, சுந்தர் கமிட்டியை நியமித்துள்ளது.சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் மத்திய அரசை கண்டித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவது, என்பது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.காரைக்குடி மண்டல பொது செயலாளர் எல்.சிவக்குமார் நன்றி கூறினார்.

Monday 13 May 2013

தீக்கதிர் செய்தி நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஜி. சுகுமாறன்


தீக்கதிர் செய்தி நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டமும் - உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஜி. சுகுமாறன் -------------------  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் 10632 க்கும் மேற்பட்ட ஒப் பந்தத் தொழிலாளர்களை சீனியாரிட்டி அடிப் படையில் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்பு நெய்வேலி ஒப் பந்த தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது. பெரும் நம்பிக்கையுடன் உள் ளனர். இந்நிலையில் தீர்ப்பின் அம்சங்க ளையும், கடந்த கால போராட்டங்களையும் நினைவு கூருவது அவசியம்.1989-ல் என்.எல்.சி. நிறுவனத்தில் பேச்சுவார்த்தையில் இருந்த ஐந்து சங்கங் களும் தொழிலாளர்களுக்கு துரோக ஒப்பந் தத்தை போட முயற்சித்தனர். அன்றைய தினம் சிஐடியு, எச்.எம்.எஸ் இரண்டு சங் கங்கள் எங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

புற்றுநோய் போல பரவும் ஒப்பந்த முறையை ஒழித்திடுக!

தீக்கதிர் கட்டுரை 
கட்டுரை :-

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலை வர் அ.சவுந்தரராசன் 


                                            சென்னை, மே 8-தொழிற்சாலைகளில் புற்றுநோய் போல் பரவும் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்க அங் கீகாரத்திற்கு மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலை வர் அ.சவுந்தரராசன் கேட்டுக்கொண்டார்.புதனன்று ( மே 8) சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப் புத்துறை மானியக்கோரிக்கை மீது நடை பெற்ற விவாதத்தில் அவர்பேசியது வருமாறு:தொழிற்சங்க அங்கீகார உரிமைகளை தொழிற்சங்கங்களின் கூட்டு பேர உரி மையை தொழிலாளர் நலவாரியம் காப் பாற்ற வேண்டும். தொழிற்சங்கத்தையே அனு மதிக்கமாட்டோம் என்பதுதான் நிறுவனங் களின் கொள்கையாக இருக்கிறது. தொழி லாளர் நலத்துறை,

இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் தமிழ் நாடு மாநில 14 வது மாநாடு நாகர்கோவி லில்


நாகர் கோவில், மே 12-

இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் தமிழ் நாடு மாநில 14 வது மாநாடு நாகர்கோவி லில் ஞாயிறன்று மாலை பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியுடன் நிறைவு பெற் றது. தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் வாலிபர் சங்கத் தின் மாநில மாநாடு மே 9 முதல் நாகர் கோவிலில் நடைபெற்று வந்தது. மாநி லம் முழுவதுமிருந்து வாலிபர் சங்கத் தின் 10 லட்சம் உறுப்பினர்களின் பிரதி நிதிகளாக 70 பெண்கள் உட்பட 546 பேர் பங்கேற்ற மாநாடு தமிழக இளை ஞர்களின் நலன் குறித்தும், வேலையின் மையின் தீவிரம் குறித்தும் அதற்குத் தீர்வுகாணும் வழிகள் குறித்தும் விவா தித்தது.

Sunday 7 April 2013

திருப்பூர் மின் பகிர்மானவட்டம் முகவர் முதல் நிலை பதவி உயர்வு-தேர்வு பட்டியல்


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம்
                            
                                                                   மேற்பார்வை பொறியாளர் அலுவலகம்
                                                                   திருப்பூர் மின் பகிர்மானவட்டம்/திருப்பூர்.
கு.ஆ.எண் ; மே.பா.பொ/திமிபிவ/திரு/நிபி 2 / கோ முமுநி/அ 878 / 2013 நாள் 27.03.2103.

பொருள்.;   நிர்வாகம்-பணித்தொகுதி ம் நிலை களப்பணியாளர்-வணிகஆய்வாளர் மற்றும்
           மின்பாதை ஆய்வாளர் பதவியில் இருந்து-முகவர் முதல் நிலை பதவி உயர்வு-
           தேர்வு பட்டியல் வழங்கப்படுகிறது.