Sunday 16 March 2014

பொதுத்துறை பாதுகாத்திட... இடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்..!

பொதுத்துறை பாதுகாத்திட... 
இடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்..!
மின் ஊழியர் மத்திய அமைப்பு அறைகூவல்...!!

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) இரண்டுநாள் பொதுக்குழு கூட்டம் நெல்லையில் மார்ச் 15, 16 தேதிகளில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைப்பின் தலைவர் கே.விஜயன், பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பொருளாளர் ஈ.அந்தோணி, துணைப் பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், எஸ்.ராஜேந்திரன், எம்.வெங்கடேசன் மற்றும் 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இப்பொதுக்குழுவை சிஐடியு மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான அ.சவுந்தரராசன் துவக்கி வைத்துஉரையாற்றினார்.