Friday 26 September 2014

தனியாரிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தினாலே போதும் கட்டண உயர்வுக்கு தேவை இருக்காது: கே.விஜயன்

திருவள்ளூர், செப். 25 -
தமிழக அரசு தனியார் அனல் மின்நிலையங்களில் இருந்து கூடுதல்விலை கொடுத்து மின்சாரம் வாங் குவதை நிறுத்தினாலே கட்டண உயர்வுக்கு தேவை இருக்காது என்று மின் ஊழியர் மத்திய அமைப் பின் முன்னாள் தலைவர் கே.விஜயன் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியது வருமாறு: தமிழக மின் வாரியத் திற்கு 6805 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில் மின் கட்டணத்தை 15முதல் 17 சதவிகிதம் வரை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனால் ஏழை நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற் படாது என தமிழக முதல் வர் ஜெயலலிதா தெரிவித் துள்ளார். எனினும் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் நடுத்தர மக்கள் இந்த மின் கட்டண உயர்வால் பாதிப்புக்கு உள் ளாகும் அபாயம் உள்ளது.
இந்த மின்கட்டண உயர் விற்கு காரணம் மத்திய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தியதால் வெளிமாநி லங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் நிலக் கரி இறக்குமதி செய்வதற்கு கூடுதலாக செலவாகிறது. இதனை சரிகட்ட கட்ட ணத்தை உயர்த்தும் மின்வா ரியம் தனியார் அனல்மின் நிலையங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய் கொடுத்து வாங்குவதை மறு பரிசீலனை செய்திருந்தாலே தற்போது மின் கட்ட ணத்தை உயர்த்தும் நிலை ஏற்பட்டிருக்காது என பல் வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து உள்ளனர். எனவே மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment