Thursday 2 April 2015

லஞ்சம் தராவிட்டால் ஒரு பைலும் அசையாது ( தீக்கதிர் செய்தி )


ஷாக் அடிக்க வைக்கும் மின்துறை அமைச்சகம்

லஞ்ச ஊழல் பெருத்துவிட்டது, கோடி கோடியாய் மக்கள் சொத்தை கொள்ளையடித்து குடும்பச் சொத்தாக மாற்றினார்கள் என்று முந்தைய அரசை பார்த்து கூப்பாடு போட்டு ஆட்சியில் அமர்ந்த அதிமுக... மின்துறை அமைச்சரின் அதிகார அத்துமீறலும் வானளாவிய வசூல் வேட்டையும் கண்டால் இந்த நாடே அதிர்ந்து போகும்... மக்களின் குறைகளைக் கேட்க வேண்டிய அரசிடம் குறைகளோடு பணத்தையும் கட்டுக்கட்டாக கொடுக்கவேண்டும். அப்போது தான் குறைகள் ஓரளவாவது களையப்படும்.
மின்வாரியத்தில் ரூ.93,000 கோடி நட்டம் என்று சொல்லப்படுகிறது. இந்த நட்டம் யாரால் ஏற்பட்டது என்று தலைமை தணிக்கை அதிகாரி (ஊஹழு) தணிக்கை செய்தால் நிச்சயம் பல பெரிய புள்ளிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். இது தோண்டத் தோண்ட ஊழல் சுரங்கம் போல் ஊழல் வந்து கொண்டே இருக்கும். எ ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து தலைமைப் பொறியாளர் பதவியை வாங்கும் நிலைஎ பல லட்சம் ரூபாய் கொடுத்து மேற்பார்வை பொறியாளர் மாறும் நிலைஎ மின் வாரியத்தில் பதவி உயர்வுகளில் வாரிய விதிமுறைகள் கிடையாது.
மந்திரி சிபாரிசுக் கடிதம் இல்லாமல் எதுவும் நடக்காது. வாரிய அதிகாரிகளோ பொம்மைகளாக ஆட்டிப்படைக்கின்றார்கள். வாரியத்தின் 8, 9, 10 வது தளங்களில் மந்திரி சிபாரிசுக் கடிதங்கள் இல்லாத கோப்புகளே கிடையாது. இதற்காக நிரந்தரமான அரசியல் தரகர்கள் அமைச்சகத்தால் ‘நியமிக்கப்படுகிறார்கள்’. அதிகாரிகள் வாரம் இரண்டு முறை அமைச்சரின் நேரடி ஒப்புதலை பெற வேண்டி இருக்கின்றது. இது என்ன மின்வாரியமா அல்லது அமைச்சரின் கம்பெனியா என்று கேட்கும் அளவுக்கு நாற்றமடிக்கிறது வாரியம்... மின்துறை அமைச்சரின் வசூல் வேட்டை இத்தோடு நிற்க வில்லையாம்.
எ குறிப்பிட்ட வணிக வளாகங்கள், 50 வீடுகள் உள்ள தொகுப்பு வீடுகள், அனைத்திற்கும் மின் இணைப்பு வழங்க வேண்டுமானால் அமைச்சரின் ஒப்புதல் தேவை. அவரின் கடைக்கண் பார்வை விழ வேண்டும். அவருக்கு உரிய பங்கு சேர வேண்டும். இவைகள் நடந்தால்தான் சாதாரண மின் இணைப்பு கிடைக்குமாம்.எ தாம்பரம் நியூ காலனி பிரிவில் 250 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி கட்டிடம் புதியதாக கட்டப்பட்டுள்ளதாம், குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு கிடைக்கவில்லையாம்,
மின் இணைப்புக் கோரி வாரியத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சென்றால் கோட்டைக்குச் செல் என்று உத்தரவாம். கடந்த பல மாதங்களாக மின் விளக்குகள் ஏந்தி மின் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்பட காடா விளக்கில் வாழ்க்கையை நடத்துகிறார்களாம்.எ குரோம்பேட்டை, சோழவரம் நகர் எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள நவரத்னா அப்பார்ட்மெண்ட்ஸ் விண்ணப்பம் அளித்து 6 மாதம் ஆகியும் மின் இணைப்பு வழங்கவில்லை. காரணம் அமைச்சர் அலுவலகம் அனுமதி வழங்கவில்லையாம். வீடு கட்டிய ஞசடிஅடிவடிசள வாரியத் தலைவரை சந்தித்த பிறகும் பயன் இல்லையாம். அமைச்சர் தலையீடு என்றதும் வாரியத் தலைவர் வாய்மூடி மௌனமானார்.சென்ற ஆட்சி சரியில்லை என்று இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னால் லஞ்சமும், ஊழலும் வழக்கம் போல பேயாட்டம் ஆடுகின்றது. மாநில னுஏஹஊ துறை விசாரிக்குமா? முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?- நமது சிறப்பு நிருபர்

No comments:

Post a Comment