Wednesday 23 July 2014

மின்வாரிய முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டை, ஜூலை 22 -தமிழ்நாடு மின்வாரியத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்விபத்தை தடுக்கும் வகையில் தரமான மின் உபகரணங்களை- போதிய அளவில் வழங்க வேண்டும்; தொழிலாளர்களின் பணியிட மாறுதலில் வாரிய நடைமுறையைப் பின்பற்றவேண்டும்; தொழிலாளர் களை மிரட்டி வேலை வாங்கும் சர்வாதிகாரப் போக்கை நிர்வாகம் கைவிட வேண்டும்; மஸ்தூர் தொழிலாளர்களை கள உதவியாளர்களாகப் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் வி.அரசுமுகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், துணைத் தலைவர் எம்.ஜியாவுதீன், திட்டச் செயலாளர் கு.செல்வராஜ், பொருளாளர் பி.ஆவுடைமுத்து மற்றும் கோட்ட நிர்வாகிகள் ஆர்.ஆறுமுகம், கே.கருப்பையா, எம்.கலியபெருமாள், வி.முத்து, ஆர்.பன்னீர்செல்வம், சி.சின்னத்தம்பி, டி.கணபதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

No comments:

Post a Comment