Monday 13 May 2013

இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் தமிழ் நாடு மாநில 14 வது மாநாடு நாகர்கோவி லில்


நாகர் கோவில், மே 12-

இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் தமிழ் நாடு மாநில 14 வது மாநாடு நாகர்கோவி லில் ஞாயிறன்று மாலை பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியுடன் நிறைவு பெற் றது. தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் வாலிபர் சங்கத் தின் மாநில மாநாடு மே 9 முதல் நாகர் கோவிலில் நடைபெற்று வந்தது. மாநி லம் முழுவதுமிருந்து வாலிபர் சங்கத் தின் 10 லட்சம் உறுப்பினர்களின் பிரதி நிதிகளாக 70 பெண்கள் உட்பட 546 பேர் பங்கேற்ற மாநாடு தமிழக இளை ஞர்களின் நலன் குறித்தும், வேலையின் மையின் தீவிரம் குறித்தும் அதற்குத் தீர்வுகாணும் வழிகள் குறித்தும் விவா தித்தது.


இது தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிறைவு நாளான ஞாயிறன்று, சங்கத்தின் புதிய மாநில நிர்வாகி கள் தேர்வு செய்யப் பட்டனர். புதிய நிர்வாகிகள்மாநிலத் தலைவராக செ.முத்துக் கண்ணன், செயலாளராக ஆர்.வேல் முருகன், பொருளாளராக எஸ்.பாலா, துணைத் தலைவர்களாக இல.சண்முக சுந்தரம், உமாமகேஸ்வரன், பி.குணசுந் தரி, எம்.கலைமணி ஆகியோரும், துணைச் செயலாளர்களாக கே.பிரபாக ரன், எம்.செந்தில், என்.கல்பனா, என். ரெஜீஸ்குமார், எம்.தாமோதரன் ஆகி யோரும், மாநில செயற்குழு உறுப்பினர் களாக ஏ.லட்சுமணன், ஏ.விஜயகுமார், ஆர்.அமர்நாத், பி.மாரியப்பன், கே. பாரதி, ஏ.ரவிச்சந்திரன், லெனின், ஜே. ஜெயக்குமார், பி.கோபிநாத், என்.பிர வீன்குமார், சு.ஜான்சி, ஜெ.ரவீந்திரன் ஆகியோர் உட்பட 81 பேர் கொண்ட மாநிலக் குழு தேர்வு செய்யப்பட்டது.புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து, அகில இந்திய பொதுச் செய லாளர் அவாய்முகர்ஜி நிறைவுரையாற் றினார். முடிவில் வரவேற்புக்குழு செய லாளர் என்.ரெஜீஸ்குமார் நன்றி கூறி னார். மாபெரும் பேரணிஇதைத்தொடர்ந்து மாலையில் நாகர்கோவிலில் ராமன்புதூரிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் வெண்படைப் பேரணி துவங்கியது.


முக்கிய வீதிகள் வழியாக நாகராஜா திடலை வந்தடைந்த இப்பேரணியில், ஊழல் மலிந்த மன் மோகன் அரசின் கொள்கைகளை விமர் சித்தும், தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் வேலையின்மைக்குத் தீர்வுகா ணக் கோரியும் எழுச்சிமிகு முழக்கங் களை இளைஞர்களும் இளம்பெண் களும் எழுப்பினர்.வழி நெடுகிலும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப் பினர் வரவேற்று முழக்கம் எழுப்பினர். பேரணியின் நிறைவாக மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன் தலை மையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் அவாய் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் உரை நிகழ்த்தினர்.

No comments:

Post a Comment