Tuesday 21 May 2013

சி.ஐ.டி.யூ., மாநாடு

காரைக்குடி:தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன சி.ஐ.டி.யு., மாநில மாநாடு காரைக்குடியில் நடந்தது. தலைவர் சவுந்தரராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., திவாகரன், பொது செயலாளர் அன்பழகன் பொருளாளர் தயானந்தம், சி.ஐ.டி.யு., மாநில பொது செயலாளர் சுகுமாறன், மின் ஊழியர் மத்திய அமைப்பு பொது செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், அரியானா மாநில போக்குவரத்து செயலாளர் ராம் அசாரே உட்பட பலர் பேசினர்.மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய, சுந்தர் கமிட்டியை நியமித்துள்ளது.சட்ட திருத்தத்தை மேற்கொள்ளும் மத்திய அரசை கண்டித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவது, என்பது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.காரைக்குடி மண்டல பொது செயலாளர் எல்.சிவக்குமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment