Wednesday, 17 December 2014
Monday, 3 November 2014
Friday, 26 September 2014
தனியாரிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தினாலே போதும் கட்டண உயர்வுக்கு தேவை இருக்காது: கே.விஜயன்
திருவள்ளூர், செப். 25 -
தமிழக அரசு தனியார் அனல் மின்நிலையங்களில் இருந்து கூடுதல்விலை கொடுத்து மின்சாரம் வாங் குவதை நிறுத்தினாலே கட்டண உயர்வுக்கு தேவை இருக்காது என்று மின் ஊழியர் மத்திய அமைப் பின் முன்னாள் தலைவர் கே.விஜயன் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியது வருமாறு: தமிழக மின் வாரியத் திற்கு 6805 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில் மின் கட்டணத்தை 15முதல் 17 சதவிகிதம் வரை உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனால் ஏழை நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற் படாது என தமிழக முதல் வர் ஜெயலலிதா தெரிவித் துள்ளார். எனினும் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் நடுத்தர மக்கள் இந்த மின் கட்டண உயர்வால் பாதிப்புக்கு உள் ளாகும் அபாயம் உள்ளது.
இந்த மின்கட்டண உயர் விற்கு காரணம் மத்திய அரசு ரயில் கட்டணத்தை உயர்த்தியதால் வெளிமாநி லங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் நிலக் கரி இறக்குமதி செய்வதற்கு கூடுதலாக செலவாகிறது. இதனை சரிகட்ட கட்ட ணத்தை உயர்த்தும் மின்வா ரியம் தனியார் அனல்மின் நிலையங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் 12 ரூபாய் கொடுத்து வாங்குவதை மறு பரிசீலனை செய்திருந்தாலே தற்போது மின் கட்ட ணத்தை உயர்த்தும் நிலை ஏற்பட்டிருக்காது என பல் வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து உள்ளனர். எனவே மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Saturday, 9 August 2014
Friday, 25 July 2014
Wednesday, 23 July 2014
மின்வாரிய முறைகேடுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை, ஜூலை 22 -தமிழ்நாடு மின்வாரியத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்விபத்தை தடுக்கும் வகையில் தரமான மின் உபகரணங்களை- போதிய அளவில் வழங்க வேண்டும்; தொழிலாளர்களின் பணியிட மாறுதலில் வாரிய நடைமுறையைப் பின்பற்றவேண்டும்; தொழிலாளர் களை மிரட்டி வேலை வாங்கும் சர்வாதிகாரப் போக்கை நிர்வாகம் கைவிட வேண்டும்; மஸ்தூர் தொழிலாளர்களை கள உதவியாளர்களாகப் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் வி.அரசுமுகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், துணைத் தலைவர் எம்.ஜியாவுதீன், திட்டச் செயலாளர் கு.செல்வராஜ், பொருளாளர் பி.ஆவுடைமுத்து மற்றும் கோட்ட நிர்வாகிகள் ஆர்.ஆறுமுகம், கே.கருப்பையா, எம்.கலியபெருமாள், வி.முத்து, ஆர்.பன்னீர்செல்வம், சி.சின்னத்தம்பி, டி.கணபதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
Friday, 11 July 2014
மின்வாரியம் : கணக்கீட்டு அதிகாரிகளிடம் பாரபட்சம் எஸ்.எஸ். சுப்பிரமணியன் - தீக்கதிர்
மின்வாரியத்தில் செயல்படும் மின் ஊழியர் மத்திய அமைப்பு, மின் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் அமைப்பாக மட்டும் அல்லாமல் அதிகாரிகளின் அவல நிலைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில்தான் வாரியத்தில் பணியாற்றும் பொறிஞர்களை ஸ்தாபனப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.இவைகளின் பின்னணியில் மின்வாரிய கணக்கீட்டுப் பிரிவில் பணிபுரிகின்ற உதவி கணக்கீட்டு அதிகாரிகள் தாங்கள் அதிகாரிகளாக பயன்படுத்தப்படவில்லை என்ற கவலையோடு மின் ஊழியர் மத்திய அமைப்பை நாடி உள்ளனர்.
அதன் அடிப்படையில் தான் வாரியத்தில் பணியாற்றும் உதவி கணக்கீட்டு அதிகாரிகளை அழைப்பது, குறைகளை பகிர்ந்து கொள்வது, நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பது என்ற அடிப்படையில் 6.7.2014 அன்று உதவி கணக்கீட்டு அதிகாரிகளின் கூட்டத்தை மின் ஊழியர் மத்திய அமைப்பு நடத்தி குறைகளையும், கோரிக்கைகளையும் அடையாளங்கண்டு வரிசைப்படுத்தி உள்ளது. 21 மின் வட்டங்களிலிருந்து 45 உதவி கணக்கீட்டு அதிகாரிகள் அக்கூட்டத்தில் கலந்து கொண்டு மின் எரிப்பு கணக்கீடு, வாரியத்தின் வருவாயை உத்தரவாதப்படுத்தி உயர்த்துவது என்ற பணிகளில் ஈடுபட்டு இருக்கும் எங்களை பச்சை மையை பயன்படுத்தி கையெழுத்திடலாம் என்ற உரிமையை தந்து, எழுது பொருளை விநியோகம் செய்யும் அலுவலக உதவியாளரைப் போல பயன்படுத்துவதாக கண்ணீர் மல்க தங்களது குறைகளை முன் வைத்து, வாரியம் எங்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு போன்றவைகளை பரிசீலிப்பது போன்றது ஒரு புறமானாலும், கணக்கீட்டுப் பணியின் பல்வேறு பணிகளை மேற்பார்வையிட்டு ஒழுகுகின்ற வருவாயை தடுத்தாலே மின் வாரியத்தின் வருவாய் சிறிது கூடுதலாவதற்கு உதவும் என்ற ஆலோசனையை முன் வைத்தனர்.
Thursday, 10 July 2014
Friday, 30 May 2014
தமிழகத்தில் ஜூன் முதல் தேதியிலிருந்து மின்வெட்டு முழுமையாக நீக்கப்படும் தேவைதொலை நோக்குத்திட்டம்
தமிழகத்தில் ஜூன் முதல் தேதியிலிருந்து மின்வெட்டு முழுமையாக நீக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ஓரளவு விவசாயிகள், சிறு குறு தொழில் உரிமையாளர்கள், பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடும் அறிவிப்பாக இருக்கிறது. ஆனால் இந்த அறிவிப்பின் ஆயுள் எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. காரணம் ஜூன் மாதத்திலிருந்து காற்றாலை களின் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த காற்றாலைகள் முழுவதும் தனியார் கைகளில் இருந்து வருகிறது. இவர்களிடம் வாங்கியே மக்களுக்கு வினியோகிக்க வேண்டும். சரி காற்று இல்லாத காலங்களில் யாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது என்ற கேள்வி எழுகிறது.
இது ஒரு புறம் என்றால் மறுபுறம் தெரிந்தே மின் வயரில் கை வைப்பது போல், அரசு தனியாரிடம் மின்சாரம் வாங்கும் ஆபத்தான வேலையில் ஈடுபட்டு வருகிறது. அதாவது தமிழக மின் வினியோக நிறுவனத்தின் மின் உற்பத்திச் செலவு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.30 என்ற நிலையில் இருந்து வருகிறது. ஆனால் தனியாரிடம் ஒரு யூனிட் ரூ. 8.52 முதல் 13.89 என்ற அளவிற்கு 6 மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கப்படுகிறது. 2012ம் ஆண்டில் மட்டும் சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் தனியாருக்கு மின்சாரம் வாங்கிய வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது தமிழகத்தில் மின் வினியோக நிறுவனம் தன்னுடைய வருவாயில் 70 சதவிகிதத்தை தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப் பயன்படுத்தியுள்ளது.
அதுவும் அரசுக்கு தனியாரின் மின்சாரம் தேவையில்லை என்ற நிலையிருந்தாலும், குறிப்பிட்ட அளவிற்கான மின்சாரத்திற்கான தொகையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியே ஆக வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு சரத்து ஆகும்.அதுவும் தமிழகத்தில் 2011ம் ஆண்டு நிலவரப்படி மின் தேவை என்பது 12 ஆயிரம் மெகாவாட். அப்போது பற்றாக்குறை 4 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. அதன் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவிற்கு மட்டுமே புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வருடத்திற்கு மின் தேவை என்பது 8 முதல் 10 சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. காரணம் மக்கள் தொகை பெருக்கம், புதிய தொழில்கள், புதிய வீடுகளுக்கான மின் இணைப்பு என்ற பல்வேறு வகையில் தேவை அதிகரித்து வருகிறது. இதனை ஈடுகட்ட எந்தவித எதிர்காலத் திட்டமும் இல்லை என்பதுதான் உண்மை.
ஏற்கனவே மின் உற்பத்தியில் இருந்து வரும் எண்ணூர், தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில் உள்ளதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குத் திட்டத்துடன் தமிழக அரசும், மின்வாரியமும் மின் உற்பத்தி திட்டங்களை வகுத்திட வேண்டும். தேவையான நிதியினை ஒதுக்கி மின் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்.
THANKS To.theekkathir
Wednesday, 21 May 2014
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.உமாநாத் மறைவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், தமிழக தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியும், இந்திய இடதுசாரி இயக்கத்தின் இணையற்ற தலைவர்களில் ஒருவருமான தோழர்.
ஆர்.உமாநாத் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு தோழர் ஆர்.உமாநாத் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
உடல்நலக்குறைவு காரணமாக திருச்சியில் தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 21.5.2014 (புதன்) காலை 7.15 மணிக்கு இயற்கை எய்தினார்.
Tuesday, 8 April 2014
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 16வது மக்களவைத் தேர்தல், 2014 தேர்தல் அறிக்கை
பகுதி 1
முன்னுரை
இந்திய நாட்டு மக்கள் 16வது மக்களவைக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிகளுக்குச் செல்லவிருக்கிறார்கள். பல்வேறு தரப்பிலிருந்தும் நாடாளுமன்ற ஜனநாயகம் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்ற நிலையில் தான் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியலில் நிலவும் பெரும் பணநாயகத்தின் வலிமையானது தொடர்ந்து ஜனநாயகத்தின் வலுவை சீர்குலைத்து வருகிறது. பொதுவாழ்விலும் அரசின் உயர்மட்டத்திலும் புரையோடிப் போயுள்ள கட்டுக்கடங்காத ஊழலானது ஜனநாயக அமைப்பின் உயிர்நிலைகளை சீழ்பிடிக்கச் செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பின்பற்றி வந்த புதிய தாராளவாதக் கொள்கைகள் நாடாளுமன்றத்தைத் தரமிழக்கச் செய்துள்ளதோடு பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள், அந்நிய நிதி நிறுவனங்கள், இவற்றிற்கு அடிபணிந்து நடக்கும் ஆளும் அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரின் கூட்டணியின் முடிவுகளுக்கு இணங்கவே அரசின் கொள்கைகள் தீர்மானிக்கப்படும் நிலைக்கும் அது தள்ளப்பட்டுள்ளது.
Sunday, 6 April 2014
மின்வாரியத்தில் பணியிட மாற்றம் தேர்தல் ஆணையத்திடம் சிபிஎம் புகார்
திருவாரூர், ஏப். 5 -
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருவாரூர் மின் திட்டக் கிளையில் பணியாற்றி வந்த கணக்கீட்டாளர்கள் இருவர், தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1-ம் தேதி பணியமர்த்தப்பட்ட ஒரு கைம்பெண்ணையும், அதே போல வேறொரு ஊழியரையும் 3.4.2014 அன்று துறையின் தேவை கருதி பணியிட மாற்றம் (டெப்டேஷன்) செய்துள்ளதாக மின்வாரிய நிர்வாகம் கூறுகிறது. இது போன்ற உத்தரவுகளை மேற்பார்வையாளர்தான் செய்ய வேண்டும். ஆனால் இயக்கம் மற்றும் பராமரிப்புத்துறையின் செயற்பொறியாளர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேபோன்று ஒரு ஊழியருக்கு ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) சார்பில் கோரிக்கை வைத்தபோது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அவ்வாறு செய்ய முடியாது என இதே நிர்வாகம்தான் தெரிவித்துள்ளது.
முன்னுக்குப் பின் முரணாக தமிழ்நாடு மின்சாரவாரிய திருவாரூர் மின்திட்டக்கிளையின் செயற்பொறியாளர் செயல்படுவதாக மின் ஊழியர் அமைப்பின் தலைவர்கள் குறைகூறுகின்றனர்.இந்த குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்ட போது நிர்வாகத்தின் வசதிக்காக தற்காலிகமாகத்தான் இந்த டெப்டேஷனை செய்துள்ளோம் என்று கூறினார்.
இது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறுவதாகாதா? என்று கேட்டபோது அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லை. இதுகுறித்த தகவல் அறிந்த சிபிஎம் மாவட்ட செயலாளர் ஐ.வி.நாகராஜன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சி.நடராசனின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றார். அவர் இது குறித்து விசாரிப்பதாக கூறியுள்ளார்.
எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த போக்கு சரியானதல்ல என்று சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இ.பி.எப்., கணக்கில் மாற்றம் செய்ய மத்திய அரசு மறுப்பு
துடில்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் (இ.பி.எப்.,) சந்தா தொகையில், உறுப்பினர்களின் அடிப்படை ஊதியத்துடன், சலுகைப் படியை சேர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தில் இருந்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்திற்கு கடிதம் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன், இதர சலுகைப்படிகளையும் சேர்த்து கணக்கிட்டு, அதன் அடிப்படையில், வருங்கால வைப்பு நிதியை பிடித்தம் செய்தால், நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும். அதே சமயம், ஊழியர்களின் வைப்பு நிதி கணக்கில், சேமிப்பு அதிகரிக்கும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது என்பது, ஐந்து கோடி உறுப்பினர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
ஆசிரியர், அரசு ஊழியர்கள் இடது சாரிகளுக்கு வாக்களிக்க வேண்டுகோள்: தீக்கதிர் செய்தி
நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலில், அரசுஊழியர்கள், ஆசிரியர்களின் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் இடது சாரிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அரசுஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து தனியாக தமிழ்நாட்டில் தேர்தலை சந்தித்திருப்பது இது முதல் முறையாகும் அரசுஊழியர் ஆசிரியர்களின் முதன்மையான கோரிக்கை புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து , ஏற்கெனவே அமலில் உள்ள வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.
பாரதிய ஜனதா தலைமையில் இருந்த மத்திய அரசு இந்ததிட்டத்தை, 2001-ம் ஆண்டு நாடாளு மன்றத்தில் அறிமுகப்படுத்தியபோதே, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பத்தடி பாயும் என்பதற்கிணங்க அன்றுதமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அண்ணா திமுக அரசு, 01-04-2003 முதல் அமல்படுத்தியது. அது மட்டு மல்லாமல் அரசுஊழியர்களின் ஓய்வூதிய கால உரிமைகள் மீது கையை வைத்தது. இதற்கெதிராக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கிளர்ந் தெழுந்து போராடியது வரலாற்று நிகழ்வாகும். அந்த நேரத்தில் 1,70,000 அரசுஊழியர்களை அண்ணா திமுக அரசு டிஸ்மிஸ் செய்தது. பணியில் சேர்க்க மறுத்தது.
Saturday, 5 April 2014
இரண்டாவது சனி விடுமுறையில் முரண்பாடு: மின்கழகத்தில் நீடிக்கும் வினோத நடைமுறை
தமிழக மின்கழகத்தில், இரண்டாவது சனிக்கிழமை குறிப்பிட்ட பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே விடுப்பு, இதர ஊழியர்களுக்கு பணி என்ற வினோத நடைமுறை, 25 ஆண்டுக்கு மேலாக நீடிப்பது, ஊழியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக மின்வாரியத்தின், மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின்செலுத்துகை கழகத்தில் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர், கணக்கீட்டாளர், எழுத்தர் உட்பட, 80ஆயிரம் ஊழியர் பணிபுரிகின்றனர். இதில், வினியோக வட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை விடப்படுகிறது. மின் உற்பத்தி பிரிவுகளில் பணிபுரியும் உதவி பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு, இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை கிடையாது. இந்த முரண்பாடு, 25 ஆண்டுக்கு மேலாக மின்வாரியத்தில் நீடிப்பது ஊழியர்களை குழப்பத்திலும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
Sunday, 16 March 2014
பொதுத்துறை பாதுகாத்திட... இடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்..!
பொதுத்துறை பாதுகாத்திட...
இடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்..!
மின் ஊழியர் மத்திய அமைப்பு அறைகூவல்...!!
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) இரண்டுநாள் பொதுக்குழு கூட்டம் நெல்லையில் மார்ச் 15, 16 தேதிகளில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைப்பின் தலைவர் கே.விஜயன், பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பொருளாளர் ஈ.அந்தோணி, துணைப் பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், எஸ்.ராஜேந்திரன், எம்.வெங்கடேசன் மற்றும் 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இப்பொதுக்குழுவை சிஐடியு மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான அ.சவுந்தரராசன் துவக்கி வைத்துஉரையாற்றினார்.
இடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்..!
மின் ஊழியர் மத்திய அமைப்பு அறைகூவல்...!!
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) இரண்டுநாள் பொதுக்குழு கூட்டம் நெல்லையில் மார்ச் 15, 16 தேதிகளில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைப்பின் தலைவர் கே.விஜயன், பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பொருளாளர் ஈ.அந்தோணி, துணைப் பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், எஸ்.ராஜேந்திரன், எம்.வெங்கடேசன் மற்றும் 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இப்பொதுக்குழுவை சிஐடியு மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான அ.சவுந்தரராசன் துவக்கி வைத்துஉரையாற்றினார்.
Friday, 21 February 2014
தொடர் மின்வெட்டுக்கு காரணம் வருடத்துக்கு 8 லட்சம் மின் நுகர்வோர் அதிகரிப்பு ஆக்கபூர்வ திட்டம் இல்லாததால் மக்கள் அவதி
தமிழகத்திற்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தியாவதோ 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான். 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை சரிகட்ட தனியார், வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 669 துணை மின்நிலையங்கள் உள் ளன. இதில் 400 கே.வி துணை மின்நிலையம் 14ம், 230 கே.வி துணை மின்நிலையம் 75ம், 110 கே.வி துணை மின்நிலையம் 580ம் உள்ளன. காற்றாலை, அனல்மின்நிலையம், நீர்மின்நிலையம், அணுமின்நிலையம் மூலம் தமிழகத்தில் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள வடசென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி, நெய்வேலி அனல்மின்நிலையங்கள் 5710 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை. கூடங்குளம், கல்பாக்கம் அணுமின்நிலையம் மொத்தம் 1440 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டவை. மேட்டூர், அமராவதி, நீலகிரி, காட்டேறி, குண்டா, மோயாறு, பாபநாசம், வைகை, முல்லைப்பெரியார், கோதையாறு ஆகிய நீர்மின்நிலையங்கள் சுமார் 1693 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டவை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள காற்றாலைகளில் மொத்தம் சுமார் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை.
Saturday, 1 February 2014
COTEE Wage revision Donation Letter copy
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION
CORPORATION LIMITED
SECRETARIAT
BRANCH,
N.P.K.R.R. MAALIGAI,
144, ANNA
SALAI,
CHENNAI – 2.
Memorandum
No.3993/ A3 / A31 /14 –1, Dated : 31-1-2014.
Sub: TANGEDCO - Contribution of donation to Trade
Union - Deduction of
donation from the salary of
the
willing Members of Central Organisation of
Tamil Nadu
Electricity Employees - Orders -
Issued.
Monday, 20 January 2014
அரசு வங்கிகளைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் ! ( வினவு )
மொத்தக் கடன் தொகையில் 50% இந்த தனியார் கார்ப்பரேட் முதலாளிகளால் சூறையாடி தீர்க்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவின் 100 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் அடுத்த 15 மாதங்களில் ரூ 2.1 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களை புதுப்பிக்க உள்ளன. அதாவது, அடுத்த 15 மாதங்களில் இந்நிறுவனங்கள் கட்ட வேண்டிய கடன்களின் காலக் கெடு முடிவுக்கு வருகின்றது, அந்தக் கடன்களுக்கு மாற்றாக புதிய கடன்களை வங்கிகள் கொடுக்கப் போகின்றன. காலாவதியாகப் போகின்ற இந்த கடன்களின் மதிப்பு 2013-ம் ஆண்டின் இறுதியில் இந்திய வங்கிகளின் நிகர மதிப்பில் 29 சதவீதம் ஆகும். இந்தத் தகவல்கள் ஃபிட்ச் குழுமத்தைச் சேர்ந்த இந்தியா ரேட்டிங்ஸ் & ரிசர்ச் என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
Thursday, 2 January 2014
ஓய்வூதிய பாதுகாப்புக்கு வேட்டு
காங்கிரஸ் - பாஜக கைகோர்ப்பு
ஓய்வூதியத்தை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா (ஞகுசுனுஹ க்ஷடைட) செப்டம்பர் 4ம் தேதி மக்களவையிலும் 6ம்தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. செப்டம்பர் 18ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.
இந்த சட்டம் பாஜகவினால் 1.1.2004 முதல் அமல்படுத்தப்பட்ட சட்ட விரோதமான புதிய பென்சன் திட்டத்தை அந்த தேதியிலிருந்தே சட்டப்படியானதாக்குகிறது. சட்ட விரோத ஆணையத்தை சட்டப்படையானதாக்குகிறது என்று ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் கூறினார்.இந்த சட்டப்படி புதிய பென்சன் திட்டத்தில் வருபவர்களுக்கு ஓய்வூதியம் பங்குச் சந்தையின் லாப நஷ்டத்தை பொருத்தது. லாபத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று சட்டமே கூறுகிறது. குறைந்தபட்ச ஓய்வூதிய உத்தரவாதமும் இல்லை. குடும்ப ஓய்வூதியமும் கிடையாது. அதுமட்டுமல்ல 1972 பணிக்கொடை சட்டத்தின்படி கூட பணிக்கொடை கிடையாது.
ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு : மின் ஊழியர் மத்திய அமைப்பு வருத்தம்
சென்னை, ஜன. 1 -
மின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த முதல்வரின் அறிவிப்பு வருத்தமும், அதிர்ச்சியும் அளிப்பதாக உள்ளது என்று மின் ஊழியர் மத்திய அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2011 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் புத னன்று (ஜன.1) வெளியிட்டுள்ளார். அதன்முழு விவரங்களையும் பரிசீலித்த பின்னரே சாதக, பாதக அம்சங்கள் குறித்து கூற முடியும்.இருப்பினும், ஊதிய உயர்வு சம்பந்த மான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 14.11.2013 அன்று வாரிய தரப்பின் ஆலோசனை முன் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட தொழிற் சங்கங்கள் வாரியத்தின் ஆலோசனை மீது கருத்துக்களை கூறின. இதன் மீது வாரியம் மற்றும் அரசின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோதே, தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கையை இறுதிப்படுத்தி அரசு அறிவிப்பதற்கு முன்னர், முதலமைச்சரோ, மின் துறை அமைச்சரோ தொழிற் சங்கங்களுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இதை அறிவித்திருக்க வேண்டும் என மின் ஊழியர் மத்திய அமைப்பு கருதுகிறது.2005-ல் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை யின்போது இன்றைய முதலமைச்சர் தொழிற் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அறிவிப்பு வெளி யிட்ட மரபைக் கூட இம்முறை கடைப் பிடிக்கவில்லை என்பது மன வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி தீக்கதிர்
Subscribe to:
Posts (Atom)